Monday 6th of May 2024 10:24:59 AM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழ்நாட்டில் 55 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள்!

தமிழ்நாட்டில் 55 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள்!


தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 55 ஆயிரத்து 152 ஆக உள்ளதாக தமிழ்நாடு சுகாதார அமைச்சு சற்று முன்னதாக தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சுகாதார அமைச்சு சற்று முன்னதாக (ஓகஸ்ட்-04) வெளியிட்டுள்ள நாளாந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் புதிதாக 5 ஆயிரத்து 63 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டள்ளனர்.

இதையடுத்து மொதத்த தொற்றாளர்களது எண்ணிக்கை 2 இலட்சத்து 68 ஆயிரத்து 285 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை இன்று 108 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 4 ஆயிரத்து 349 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் ஒரு இலட்சத்தை கடந்த தொற்று!

சென்னையில் இன்று ஆயிரத்து 23 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதை அடுத்து மொத்த தொற்று ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 27 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இதுவரை 2 இலட்சத்து 8 ஆயிரத்து 784 பேர் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து திரும்பியதை அடுத்து தற்போது 55 ஆயிரத்து 152 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE